Last Updated : 24 Feb, 2021 04:13 PM

 

Published : 24 Feb 2021 04:13 PM
Last Updated : 24 Feb 2021 04:13 PM

அமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவர்: புதுச்சேரி பாஜக துணைத் தலைவர் தகவல்

காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டப் பந்தல் அமைப்பதற்கான கால்கோள் நிகழ்வில் பங்கேற்ற பாஜகவினர்

காரைக்கால்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்கால் வரும்போது, முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என புதுச்சேரி மாநிலப் பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28-ம் தேதி காரைக்கால் வர உள்ளதாகவும், காரைக்கால் சந்தைத் திடலில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தைத் திடலில் பொதுக் கூட்டத்துக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று (பிப்.24) தொடங்கப்பட்டன. இதற்காகப் பந்தல் கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி, காரைக்கால் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வி.கே.கணபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான அனுமதி பெறப்பட்டுவிட்டது. காரைக்காலில் இதுவரை இல்லாத வகையிலான மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டமாக இது இருக்கும். அதன் பிறகு காரைக்காலின் சரித்திரமும் மாறும் என்று நம்புகிறோம்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்களின் வாரிசுகள் உள்ளிட்ட நிறையப் பிரமுகர்கள் கட்சியில் இணையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x