Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

ஜெயலலிதா பிறந்தநாளில் பொங்கல் வையுங்கள்: அதிமுகவினருக்கு அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

பொங்கல் வைத்துக் கொடியேற்றி ஜெயலலிதா பிறந்த நாளை கொண் டாடுங்கள் என அதிமுகவினருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் டி.குன் னத்தூர் ஜெயலலிதா கோயிலில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:

முதல்வர் பழனிசாமி கடந்த நான்காண்டில் 400 ஆண்டுகால வளர்ச்சித் திட்டங்களைச் செய் துள்ளார். ஜெயலலிதாவின் லட்சி யத்தை வேதவாக்காக நினைத்து அவரது பிறந்த நாளான 24-ம் தேதி மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அனைத்து கிரா மங்களிலும் அதிமுகவினர் பொங்கல் வைத்தும், அதிமுக கொடியை ஏற்றியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் மகத்தான வெற்றிபெற்று சாதனை படைக்க தேர்தல் பணி யாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x