Published : 20 Nov 2015 02:42 PM
Last Updated : 20 Nov 2015 02:42 PM

வானிலை முன்னறிவிப்பு: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேனி, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

லட்சத்தீவில் நிலை கொண்டிருந்த காற்றழுத் தாழ்வு பகுதியானது, தற்போது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை நீடிக்கும் .

அதேபோல், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கேட்டியில் 12 செ.மீ. மழையும், குன்னூரில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 12 செ.மீ மழையும், பூண்டி, பூந்தமல்லி பகுதிகளில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x