Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8-ம் தேதி முதல் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளகோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் முகாமில் கலந்து கொண்டுள்ளன.
வலியால் கதறும் யானை
இந்நிலையில், முகாமில் ஒருயானையை இருவர் தாக்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்தயானை வலியால் கதறுவதுபோன்ற காட்சி, வீடியோவைப் பார்ப்பவரை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் இருந்தது.
இதையடுத்து, அறநிலையத் துறை மற்றும் வனத் துறைஅதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை, அதன் பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் குச்சியால் தாக்கியது தெரியவந்தது.
கோயில் நிர்வாகம் உத்தரவு
இதையடுத்து, பாகன் வினில்குமாரை சஸ்பெண்ட் செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT