

தமிழகத்தில் இன்று 452 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,48,275.
இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 154 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 298 பேருக்குத் தொற்று உள்ளது.
* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,109.
* மொத்தம் மாதிரி எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,68,05,946.
* இன்று ஒரு நாளில் மாதிரி எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49,995.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,48,275.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 452.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 154.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,12,585 பேர். பெண்கள் 3,35,655 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 275 பேர். பெண்கள் 177 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 460 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,31,706 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை.
* மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,460 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4138 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.