தமிழகத்தில் இன்று 452 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 154 பேருக்கு பாதிப்பு: 460  பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 452 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 154 பேருக்கு பாதிப்பு: 460  பேர் குணமடைந்தனர்
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று 452 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,48,275.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 154 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 298 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,109.

* மொத்தம் மாதிரி எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,68,05,946.

* இன்று ஒரு நாளில் மாதிரி எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49,995.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,48,275.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 452.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 154.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,12,585 பேர். பெண்கள் 3,35,655 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 275 பேர். பெண்கள் 177 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 460 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,31,706 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை.

* மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,460 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4138 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in