Published : 21 Feb 2021 02:50 PM
Last Updated : 21 Feb 2021 02:50 PM

புதுவை, தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தேனி, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலும், புதுவையிலும் சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் புதுவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கோத்தகிரி-9 செ.மீ., குன்னூர்- 7 செ.மீ., சோத்துப்பாறை-6 செ.மீ., தண்டராம்பேட்டை -4செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, நீலகிரி, நெல்லை, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மற்ற சில பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான தூறல் மழை பெய்யும்.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x