Last Updated : 21 Feb, 2021 02:51 PM

 

Published : 21 Feb 2021 02:51 PM
Last Updated : 21 Feb 2021 02:51 PM

புதுச்சேரியிலிருந்து விடைபெற்றார் கிரண்பேடி

ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜ்நிவாஸில் தங்கியிருந்த கிரண்பேடி புதுச்சேரியில் இன்று விடைபெற்றார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 16ம் தேதி பதவியிலிருந்து நீககப்பட்டார். அதையடுத்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து அடுத்த நாள் அவர் புதுச்சேரி வந்தார். 18ம் தேதி காலை பதவியேற்றார்.

ஆளுநர் தமிழிசை பதவியேற்றாலும், ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவரது பொருட்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி ராஜ்நிவாஸிலிருந்து கிரண்பேடி விடைபெற்றார். கார் மூலம் கோவை செல்லும் அவர், ஈஷாவில் சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x