

வடகிழக்கு பருவ மழையினால், பூண்டி, சோழவரம், புழல், செம் பரம்பாக்கம் உள்ளிட்ட சென் னைக்கு குடிநீர் தரும் 4 ஏரிகளின் நீர் இருப்பு, அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. இதனால், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இச்சூழலில், வடகிழக்கு பருவ மழை சற்று ஓய்ந்துள்ளது. இத னால், இந்த ஏரிகளுக்கு வரும் மழைநீரின் அளவு குறைந் துள்ளது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5, 639 கன அடி மழை நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,700 மில்லியன் கன அடியானது.
இச்சூழலில், மழைநீர் வரத்து குறைவு காரணமாக, 16-ம் தேதி மாலை முதல், 17-ம் தேதி இரவு வரை வினாடிக்கு 300 கன அடி முதல், 25 ஆயிரம் கன அடி வரை கொசஸ்தலை ஆற்றில் விடப்பட்ட உபரி நீரின் அளவு படிபடியாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று காலை முதல், பூண்டி ஏரியிலிருந்து, உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரி
மாறாக, பூண்டி ஏரியிலிருந்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு, இணைப்புக் கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.