Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை: பாட்டி நாகம்மாள் கைது

உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறை பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(32). வேன் ஓட்டுநர். இவரது மனைவி சிவபிரியங்கா(28). இவர்களுக்கு ஏற்கெனவே 7 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சிவபிரியங்காவுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிப்.12-ம் தேதி பிறந்தது. அக்குழந்தை பிப். 17-ம் தேதி மர்மமான முறையில் இறந்தது.

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் குழந்தை மூச்சு திணறடிக்கப்பட்டு இறந்திருப்பதாகத் தெரியவந்தது. இது கொலை வழக்காக மாற்றப்பட்டு சின்னச்சாமியின் தாயார் நாகம்மாளை(55) போலீஸார் கைது செய்தனர். நாகம்மாள் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்: என் மகனுக்கு ஏற்கெனவே 7 வயதில் பெண் குழந்தை குறைபாடுடன் நடக்க முடியாமல் உள்ளது. அடுத்து 2 வயது பெண் குழந்தையும் பேச முடியாமல் உள்ளது. தற்போது 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கும் உடல் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் நான்தான் கொலை செய்தேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x