Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
கரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுய நிதி கல்லூரிகளில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இக் கல்லூரியில் பயிலும் 9,69,047 மாணவ, மாணவிகள் கல்வி கற்க எல்கார்ட் நிறுவனம் மூலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை தினமும் 2 ஜிபி இலவச சிம் கார்டுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 1-ம் தேதி அரசு தொடங்கியது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 44 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுய நிதி கல்லூரிகளில் பயிலும் 25,822 மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா சிம் கார்டுகள் நேற்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி சிவகாசியில் உள்ள எஸ்.எப்.ஆர். கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா சிம் கார்டுகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி சார்-ஆட்சியர் தினேஷ்குமார், எஸ்.எப்.ஆர். கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் காந்திமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT