Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

மதுராந்தகத்தில் மனைவியை கொலை செய்த மருத்துவர் கைது

மதுராந்தகம், ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்குமார் (40). இவரது மனைவி கீர்த்தனா (33). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. கோகுல்குமார் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தார்.

இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மருத்துவர் கோகுல்குமார் சோத்துப்பாக்கம் பகுதியில் தனியாக தங்கியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கோகுல்குமார், மனைவி கீர்த்தனா தங்கி இருந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோகுல்குமார் கத்தியால்கீர்த்தனாவின் கழுத்தில் குத்தினார். இதைத் தடுத்த கீர்த்தனாவின் அப்பா முரஹரியையும் குத்தினார்.

பின்னர் தனது மனைவியை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து, அவர் மீது கார் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடி நோக்கி செல்லும்போது போலீஸார் அவரை மடக்கி கைது செய்தனர்.

இது தொடர்பாக மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கீர்த்தனாவின் சடலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காயமடைந்த அவரது தந்தை முரஹரியும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x