

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்க மது ரையில் ரத யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது.
ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது ரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ராமர் கோயிலுக்கு நிதி வசூலிக்க பிப். 27-ம் தேதி வரை ராமன், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்கிர கங்களுடன் ரத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதற்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பிப். 13-ம் தேதி மனு அளித்தோம். இந்நிலையில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் காவல் உதவி ஆணையர் பிப்.18-ல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கரோனா நோய் பரவலால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூற ப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இய ல்பு நிலை திரும்பியுள்ளது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம். எனவே, ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் னிவாசராகவன் வாதிட்டார். பின்னர், மதுரையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத் திர அறக்கட்டளையின் ரத யாத் திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிபதி உத் தரவிட்டார்.