அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

அரசுக் கல்லூரிகளில் கவுரவ உதவியாளர்களை உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் நான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன்.

இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை உதவி போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in