Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதிசென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்றார்.
முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 14, 23, 24, 25-ம் தேதிகளில் தமிழகத்திலும், கடந்த 17-ம் தேதி புதுச்சேரியிலும் பிரச்சாரம் செய்தார்.
கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பிரச்சாரகூட்டத்தில் பிரதமர் மோடியும், விழுப்புரத்தில் 28-ம் தேதிநடைபெறும் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் சென்னை வர உள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பேச இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT