Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

இளம் பெண் மர்ம மரணம்: பெண் பூசாரியிடம் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள். கவிதா கடந்த 9 ஆண்டுக்கு முன் இறந்ததால் அவரது உடலை சொந்த இடத்தில் அடக்கம் செய்தனர்.

வீரசெல்வம் தனது மகன் கோபிநாத்(21), மகள் தாரணி (19) ஆகியோருடன் வசித்து வந்தார். தாரணி கீழக்கரை தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தனது தாய் உடல் அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றார். அதன் பின் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தாரணி உடலில் தாயின் ஆவி புகுந்துவிட்டதாகக் கூறி திருப்பாலைக்குடியில் உள்ள பெண் பூசாரியிடம் சென்று பரிகாரம் செய்தனர். அப்போது ஆவியை விரட்ட சாட்டை, சிறு குச்சியால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் அடித்ததில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாரணியை உச்சிப்புளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே தாரணி உயிரிழந்துவிட்டதாகத் தெரி வித்தார். உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிந்து வீரசெல்வம் மற்றும் பெண் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x