வேலூர் அருகே மதுபோதையில் விபரீதம்: மகனை சுட்டுக்கொன்ற தந்தை கைது

கொலையான வினோத்.
கொலையான வினோத்.
Updated on
1 min read

மது போதையில் மகனை துப் பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி(50). இவரது மகன் வினோத்(25). இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டுக்கு சென்றார். இதைக் கண்ட வினோத், தனது தந்தையை கண்டித்துள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு வேகமாக சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதையறிந்த வினோத், தந்தை தற்கொலை செய்து கொள்வாரோ என அஞ்சி கூச்சலிட்டார். உடனே, தந்தையின் அறைக்கு சென்று கதவை தட்டி அவரை வெளியே வருமாறு அழைத்தார்.

ஆனால், அறைக்குள் சென்ற சுப்பிரமணி தான் வைத்திருந்த இரட்டைக் குழல் நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அங்கு அறைக் கதவின் வெளியே காத்திருந்த வினோத்தை நோக்கி சுப்பிரமணி துப்பாக்கியால் சுட்டார். அதில், வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் கிராமிய காவல் துறையினர் அங்கு சென்று வினோத் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in