Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
ஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்தஆய்வின் மூலம் தரமற்ற மற்றும்போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால், தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,001 மருந்துகள் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. இதில், 985மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் ஜீரண பாதிப்பு, பாக்டீரியா தொற்றுபிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சிலவும்தரமற்றதாக இருந்தது தெரியவந்தது. இந்த மருந்துகள் குஜராத்,இமாச்சலப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த தரமற்ற மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT