Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
பொள்ளாச்சி அடுத்த வேட்டைக் காரன்புதூர் பகுதியில் பெண் யானையின் கோரைப் பற்களை சிலர் விற்பனை செய்ய முயற்சிப் பதாக கிடைத்த தகவலின்பேரில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கிய ராஜ் சேவியர் தலைமையில் வனத் துறையினர் நேற்று முன்தினம் சேத்துமடை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தம்மம்பதியை சேர்ந்த மணியன் (42), ஒடையகுளம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் ஒரு துணிக்கடையில், யானையின் இரு கோரைப் பற்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருவரையும் வனத் துறையினர் கைது செய்து கோரைப் பற்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறும்போது, ‘‘போத்தமடை வனச் சுற்று, சங்கிலி பாறை என்ற இடத்தில் இறந்த யானையின் இரு கோரைப் பற்களை மணியன் எடுத்து வந்துள்ளார்.
அதுகுறித்து மோகன்ராஜிடம் தெரிவித்து அவருக்கு விற்க முயன்றுள்ளார்.
யானை இறந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத களப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்தைச் சேராத வெளியாட்கள் எவரும் வனப் பகுதிக்குள் நுழைவதை தடுக்க உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது”என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT