Last Updated : 16 Feb, 2021 02:43 PM

 

Published : 16 Feb 2021 02:43 PM
Last Updated : 16 Feb 2021 02:43 PM

புதுச்சேரியில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று 

புதுச்சேரியில் இன்று புதிதாக 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் இன்று (பிப்.16) வெளியிட்ட தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,082 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பில்லை.

மேலும், உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 658 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 488 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 110 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 103 பேர் என மொத்தம் 213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 617 (97.68 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 9 ஆயிரத்து 743 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5 லட்சத்து 66 ஆயிரத்து 26 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், மருத்துவப் பணியாளர்கள் 5,920 பேர், முன்களப் பணியாளர்கள் 323 பேர் என மொத்தம் 6,243 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x