Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
புதுச்சேரிக்கு நாளை வருகை தரும் ராகுல்காந்தி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுடன் உரையாடுகிறார் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரச்சார பாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதில், ஒரு பாடலை முதல்வர் நாராயணசாமி நேற்று கட்சி அலு வலகத்தில் வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி நாளை (பிப். 17) புதுவைக்கு வருகிறார். அரசியல் கலப்பில்லாத இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மதியம் 12 மணியளவில் புது வைக்கு வரும் ராகுல்காந்தி சோலை நகரில் அரசியல் சாராதமீனவ மக்களோடு உரையாடு கிறார். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் மின்னஞ்சல் மூலம் தங்கள் கல்லூரிக்கு வரும்படி ராகுலுக்கு அழைப்பு விடுத்தி ருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்று பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிக ளோடு கலந்துரையாடுகிறார்.
இந்நிகழ்வு எங்கு நடைபெறும் என்பது விரைவில் தெரிவிப்போம். இதனைத்தொடர்ந்து மதியம் 3 மணியளவில் ஏஎப்டி திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார் என்று தெரிவித்தார். பேட்டியின்போது காங்கி ரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட னிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT