Published : 20 Nov 2015 08:42 AM
Last Updated : 20 Nov 2015 08:42 AM

பாமக எம்எல்ஏ குரு மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி

வன்னியர் சங்கத் தலைவரும் பாமக ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப் பினருமான ஜெ.குரு மீதான அவதூறு வழக்கை, அரியலூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

2005-ல் தமிழக அரசால் அறி விக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே ஆண்டு ஜனவரி 21-ல் தா.பழூரில் நடைபெற்ற உண் ணாவிரதப் போராட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவரும் தற்போதைய ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதி உறுப் பினருமான ஜெ.குரு உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர்.

இதையடுத்து, ஜெ.குரு மீது தா.பழூர் போலீஸார் அவ தூறு வழக்கு தொடர்ந்தனர். ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு, 2015 ஜனவரி 21-ல் தள்ளுபடி செய்யப் பட்டது.

இதைத் தொடர்ந்து, போலீ ஸார் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.ஏ. ரகுமான், நேற்று குரு மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x