Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

கழிவறையே இல்லாத வீட்டில் கழிவறை கட்டியதாக கணக்கு: இளையான்குடி அருகே தூய்மை பாரத திட்டத்தில் முறைகேடு

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கழிவறையே இல்லாத வீட்டில் கழிவறை கட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதேபோல, மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிவறை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தூய்மை பாரதத் திட்டத்தில் தனிநபர் இல்லக் கழிவறை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மானியமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.7,200-ம், மாநில அரசு ரூ.4,800-ம் வழங்குகின்றன.

இந்நிலையில், இளையான்குடி அருகே அரணையூர் ஊராட்சி பெருமா னேந்தல் கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை கட்டாமலேயே, கட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிவறை கட்டி யதில் முறைகேடு நடந்துள்ளதை பெருமா னேந்தலைச் சேர்ந்த சேகர் என்பவர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

மேலும் இம்முறைகேடு குறித்து முதல்வர், மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பெருமானேந்தல் சேகர் கூறியதாவது:

மத்திய அரசின் இணையதளத்தில் தனிநபர் இல்லக் கழிவறை திட்டப் பயனாளிகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

அப்பட்டியலில் எனது தந்தை மகாலிங்கம், பெரியப்பா தங்கவேலு ஆகியோரது பெயர்கள் இடம் பெற் றுள்ளன. ஆனால், அவர்களுக்கு தனிநபர் இல்லக் கழிவறை கட்டிக் கொடுக்கவில்லை.

மேலும் ராசு என்பவர் இறந்த நிலையில், அவரது பெயரிலும் கழிவறை கட்டியதாகக் கூறியுள்ளனர். ஆனால், இதுவரை அவரது வீட் டில் கழிவறையே கட்டவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிவறை கட்டாமலேயே பணத்தை எடுத்துள்ளனர், என்று கூறினார்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எந்த முறைகேடும் நடக்கவில்லை. முறைகேடாகக் கழிவறை கட்டியதாகக் கூறப்படும் பயனாளிகளுக்கு மானி யமும் வழங்கவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x