Published : 26 Nov 2015 08:02 PM
Last Updated : 26 Nov 2015 08:02 PM

ஆறுகள், கால்வாய்கள் அருகில் செல்ல வேண்டாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா, பக்கிங்காம் கால்வாய்களில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் பொதுமக்கள், சிறுவர்கள் அருகில் போக வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய் ஆகியவற்றில் அதிகளவிலான தண்ணீர் செல்கிறது.

ஆகவே, பொதுமக்கள் இந்த ஆறு மற்றும் கால்வாய்களில் குளிக்கவோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ, தண்ணீர் செல்லும் அளவை வேடிக்கை பார்க்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆற்றின் கரையோரங்களுக்கு செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.

மேலும், இது தொடர்பாக வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினரால் ஆறுகள் மற்றும் கால்வாய் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x