Published : 06 Nov 2015 08:40 AM
Last Updated : 06 Nov 2015 08:40 AM
குமாரபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் பீரோவை உடைத்து 138 பவுன் நகை, ரூ. 6.50 லட்சம் ரொக்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் - பள்ளி பாளையம் செல்லும் சாலையில் தனியார் அறக்கட்டளைக்கு சொந் தமான அங்காளம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற அந்தக் கோயில் பூசாரிகளாக அங்கப்பன், காந்தி ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் நடை சாத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடையை திறக்க பூசாரிகள் சென்றனர்.
அப்போது கோயில் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ வில் இருந்த 138 பவுன் நகை, ரூ. 6.50 லட்சம் ரொக்கப் பணம், 5 கிலோ எடை கொண்ட வெள் ளிக் கவசம், கிரீடம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சிய டைந்த கோயில் பூசாரிகள் நடந்த சம்பவம் தொடர்பாக, குமாரபாளை யம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்தில் போலீஸார் திருட்டு நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக் கப்பட்டனர். தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந் தில்குமார் நேரில் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT