கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்க கூடுதலாக 2 ஆயிரம் ஊழியர்கள்: மின் வாரியம் நடவடிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்க கூடுதலாக 2 ஆயிரம் ஊழியர்கள்: மின் வாரியம் நடவடிக்கை
Updated on
1 min read

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று கடந்த 9-ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் அதிகளவில் பாதிக்கப்பட் டது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், கடலூர் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் இதர பகுதிகளில் இருந்து மின் பணியா ளர்களை கடலூருக்கு அனுப்பி, நிவார ணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூரில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின் மாற்றிகள், 226 கி.மீ. தொலை வுக்கு மின் வட கம்பிகள் சேதமடைந்துள் ளன. மின் விநியோகத்தை சீரமைக்க கரூர், திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, கோவை, தருமபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் 2,039 மின் பணியாளர்கள் மற்றும் 3 மேற்பார்வை பொறியாளர்கள் கடலூருக்கு சிறப்புப் பணிக்காக நியமிக் கப்பட்டுள்ளனர்.

தற்போது 5 நகராட்சிகள், 15 பேரூராட்சி கள், 700 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 275 கிராமங் களில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 143 கிராமங்களில் மழை நீர் வடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மு.சாய்குமார், பகிர்மானப் பிரிவு இயக்குநர் மு.பாண்டி ஆகியோர் கடலூரில் முகாமிட்டு மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in