Published : 17 Nov 2015 11:47 AM
Last Updated : 17 Nov 2015 11:47 AM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பின

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ம் தேதி (அக்டோபர் 28) தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை நகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய 4 பிரதான ஏரிகள் நிறைவு செய்கின்றன. இதுதவிர வீராணம் ஏரியிலிருந்தும் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளன.

இன்று காலை (17.11.2015) நிலவரப்படி:

ஏரிகள்

இன்றைய நிலவரம்

முழு கொள்ளளவு

பூண்டி

139 அடி

140 அடி

சோழவரம்

62 அடி

64.50 அடி

செங்குன்றம்

43.80 அடி

50.20 அடி

செம்பரம்பாக்கம்

83.70 அடி

85.40

குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் வரும் கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x