Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
புதுச்சேரியில் பொருளாதாரத்தில் வசதியானோருக்கு இலவச அரிசி நிறுத்தப்பட்டது போல், பொருளாதார அளவுகோலுடன் இனி காமராஜர் கல்வி உதவித் தொகை தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுவையில் தனியார் சுயநிதி மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
எம்பிபிஎஸ் மாணவர்கள் ரூ.2.25 லட்சம், பொறியியல் மாணவர்கள் ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி பெற்று வரு கின்றனர். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானமாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். புதுவை அரசு சராசரியாக ரூ.50 கோடி இத்திட்டத் துக்கு ஒதுக்கீடு செய்கிறது. இந்நிலையில் 2019-20 கல்வி யாண்டில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.4 கோடி அனுமதி கோரி துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.
இந்தக் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார். காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தில் இனிமேல், பொருளாதார ரீதியான அளவுகோலை கொண்டு பயனாளிகள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் மிச்சமாகும் தொகையை பல படிப்புகளுக்கு விரிவுபடுத்தலாம் என ஆலோசனையும் வழங் கியுள்ளார்.
இத்திட்டத்தில் பல லட்சம் சம்பாதிக்கும் வசதி படைத்தவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். இதனால்தான் ஆளுநர் கல்வித்துறைக்கு திடீர் நிபந்தனை விதித்துள்ளார். அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்களுக்கு இலவச அரிசி நிறுத்தப்பட்டது. அதேபோல கல்வி உதவித்தொகையும் நிறுத் தப்பட வேண்டும் என கிரண்பேடி முடிவெடுத்து நிபந்தனை விதித்துள்ளார்.
இத்திட்டத்தில் பல லட்சம் சம்பாதிக்கும் வசதி படைத்தவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT