Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ஆதிதிராவிடர் பெண் வீட்டில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகைதந்தார். இங்கு மாநில பாஜக சார்பில் நடந்த மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் கூட்டதிலும் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட டி.என் பாளையம் பகுதிக்கு சென்று அங்குள்ள ஆதிதிராவிடர் மக்களுடன் உறையாடினார்.
பிறகு உழவர்கரை தொகுதிக் குட்பட்ட வயல்வெளி நகருக்கு சென்ற மத்திய அமைச்சர் ஆதிதிராவிடர் பெண்ணான வேல்விழி என்பவரின் வீட்டுக்கு சென்று, அங்கு அவரது குடும்பத் தினருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
அதன்பிறகு அங்கிருந்து புறப் பட்டு சென்றார். புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் நியமன எம்எல்ஏ மற்றும் உழவர்களை தொகுதியின் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வேல்விழி என்பவரின் வீட்டுக்கு சென்று மதிய உணவு அருந்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT