Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

கரோனாவுக்கு பிறகும் 50 டன்னுக்கு பதிலாக 2 டன் மட்டுமே வருவதால் மதுரையில் தொடர்ந்து உச்சத்தில் மல்லிகைப் பூ விலை

50 டன் மல்லிகைப் பூக்களுக்குப் பதிலாக இரண்டு டன் மட்டுமே மதுரை சந்தைக்கு வருகிறது. இதனால் மல்லிகைப் பூ விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருப்பரங் குன்றம், திருமங்கலம், கல்லுப் பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி ஆகிய இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை சாகுபடி செய்கின்றனர்.

மதுரை மல்லிகையின் மனமும், நிறமும் தமிழகத்தில் வேறு எங்கும் உற்பத்தியாகும் பூக்களில் இருக்காது. அதனால் உள்ளூர் முதல் உலகச் சந்தைகள் வரை மதுரை மல்லிகைக்கு பெரும் வரவேற்பு உண்டு. பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் மல்லிகை உற்பத்தி சீசன் முடியும். கடந்த ஆண்டு இந்த சீசனில் கரோனா ஊரடங்கால் பூக்கள் தேவை இல்லாமல் போனது.

அதனால் மல்லிகை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் செடிகளில் பூக்களைப் பறிக் காமலே விட்டு பெரும் நஷ் டத்தை சந்தித்தனர். ஏராளமான விவசாயிகள் மாற்று விவசாயத் துக்கு மாறினர். அதனால் சந்தைக்கு மல்லிகை பூக்கள் வரத்து மிகக் குறைவாக உள்ளது. இதனால் சந்தைகளில் மல்லிகை விலை உச்சத்தில் இருந்து வருகிறது. முகூர்த்த நாட்களில் கிலோ ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரி ராமச் சந்திரன் கூறுகையில், ‘‘கடந்த சீசன் காலத்தில் 50 டன் மல்லிகைப் பூக்கள் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம் வரை அரை டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தற்போது 2 டன் வரத் தொடங்கியுள்ளது. பற்றாக்குறையால் மல்லிகைப் பூ விலை அதிகரித்துள்ளது. தற்போது பூக்கள் வரத்து உயர்ந்து வருகிறது. இருப்பினும் பழைய நிலைக்குத் திரும்ப சிறிது காலம் பிடிக்கும் என்றார்.

இது குறித்து வேளாண் உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கரோனா ஊரடங்கின்போது செடிகளுக்கு விவசாயிகள் மருந்துகள் தெளிக்கவில்லை. முறையாகத் தண்ணீர் பாய்ச்ச வில்லை. மல்லிகைப் பூச்செடி களைப் பொறுத்தவரை அடிக்கடி வெட்டி விட வேண்டும். கரோனா ஊரடங்கின்போது வருமானம் இல்லாததால் விவசாயி களால் இந்த பராமரிப்பு செய்ய முடிய வில்லை. ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால் அது செடிகளில் உள்ள அனைத்து சத்துகளையும் எடுத்து விடும். அதனால், செடிகள் குறுகிவிடும். இதுபோன்ற காரணங்களால் மல்லிகைப் பூ செடிகள் சாகுபடி பரப்பும், பூக்கள் உற்பத்தியும் பல மடங்கு குறைந்தது. இதை உடனே சரி செய்ய முடியாது. மல்லிகை செடிகள் வணிக ரீதியாக மகசூல் கிடைக்க 5, 6 ஆண்டுகள் வரை பிடித்து விடும். தற்போது மல்லிகைப் பூக்கள் உற்பத்தி இழப்பை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஆகும். அதனால், கரோனாவுக்கு பிற கான இந்த காலம், மல்லிகை மட்டு மின்றி ரோஜா, பிச்சிப் பூ விவசாயி களுக்கும் மிகச் சிரமமானது.

தற்போது கோடை வெயில் தொடங்கும் காலத்தில் மல்லிகைச் செடிகளைப் பரா மரிப்பது மிகக் கஷ்டம். ஜூனில் அடுத்த மழைக்காலம் தொடங் கும்போதுதான் மல்லிகைச் செடி களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவில் ஒரு நாளைக்கு 700 விவசாயிகள், விவசாயம் மீது அதிருப்தியடைந்து வெளியேறுகிறார்கள். இது எதிர்காலத்தில் பெரிய கெடுதலாகி விடும். இது போன்ற விவசாயிகளை காப்பாற்ற அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x