Published : 26 Nov 2015 09:39 AM
Last Updated : 26 Nov 2015 09:39 AM
வெள்ளம் காரணமாக பள்ளிக் கரணை பகுதி கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக ரேடியல் சாலையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரண மாக பள்ளிக்கரணையின் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித் தனர். ஓரளவு வெள்ள நீர் வடிந்த நிலையில் திங்கள்sகிழமை பெய்த கன மழையால் இந்தப் பகுதி களில் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந் துள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியைச் சேர்ந்த பால முருகன் கூறும்போது, “10 நாட் களுக்கு மேலாக வெள்ள நீர் சூழ்ந் தும் இதுவரை எந்த அரசு அதிகாரி யும் பார்க்கவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள், குழந்தைகளைக்கூட மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT