Published : 01 Nov 2015 10:20 AM
Last Updated : 01 Nov 2015 10:20 AM
சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை, குடலியல் அறுவை சிகிச்சை மைய இயக்குநர் எஸ்.எம்.சந்திரமோகன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை பணியாற் றிய இவர், இரைப்பை குடலி யல் அறுவை சிகிச்சையை தொடங்கினார். அதன்பின் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறை தலைவராக 2008-ல் பொறுப்பேற்றார். தனது தீவிர முயற்சியால் இத்துறையை, இரைப்பை உணவுக்குழாய் நோய்களுக்கான சிறப்பு மையமாகவும், இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை மையமாகவும் தரம் உயர்த்தினார்.
புற்றுநோய், தற்கொலை தடுப்பு, புகையிலை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள் ளார்.
ஓய்வுபெற்ற டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகனுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.சாந்தாராம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஆர்.விமலா மற்றும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், டாக்டர் சந்திரமோகனை பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT