Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

ஆண்டிபட்டியில் சசிகலா வரவேற்பு போஸ்டர் மீது அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் வாக்குவாதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சசிகலா வரவேற்பு போஸ்டர் மீது ரவீந்திரநாத் எம்.பி. பிறந்தநாள் போஸ்டரை அதிமுகவினர் ஒட் டினர். இதனால் இருதரப்பினருக் கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் அவ்வப்போது போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அதிமுக ஒன்றிய இளைஞர் பாசறைத் தலைவர் பாரத் தலைமையில் ஆண்டிபட்டியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இவர்கள் சில இடங்களில் சசிகலா வரவேற்பு போஸ்டர்கள் மீது தங்களின் போஸ்டர்களை ஒட்டினர். அவர் களுக்கு சசிகலா ஆதரவு அதிமுக வினரும், அமமுகவினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத் தனர்.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி, கூக்கால் ஊராட்சி பகுதியில் பள்ளங்கி கோம்பை அதிமுக கிளைச் செயலாளர் முத்தையா, காமராஜபுரம் கிளைச் செயலாளர் வைர ஈஸ்வரன் ஆகியோர் இணைந்து சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x