Published : 31 Jan 2021 09:25 AM
Last Updated : 31 Jan 2021 09:25 AM
விழுப்புரத்தில் நேரு இளைஞர் மன்றம் சார்பில் நேற்று இளையோர் விழா ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர், “இளைஞர் களிடையே ஜனநாயக பண்பு, தலைமைத்துவத்தை வளர்ப்பது; உள்ளுர் பிரச்சினை களை கண்ட றிந்து இன்றைய இளைஞர்கள் அரசு துறை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண்பதே இந்த விழாவின் நோக்கம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125 ஆண்டு பிறந்த தினத் தினை முன்னிட்டு “பராக்கிரம் திவாஸ்”என்று ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் நேதாஜியின் வீர தீர செயல்கள் குறித்த பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சேகுவாரா படம் உள்ள டீ ஷர்ட் அணிவது போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவம் பதித்த டீ ஷர்ட்களை இளைஞர்கள் அணிந்து அவரை பெருமைபடுத்த வேண்டும்.
நேரு இளையோர் மன்றத்தால், நீர் மேலாண்மை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கல்லணையை கட்டிய கரிகாலச் சோழன் சிறப்பான நீர் மேலாண்மையைச் செய்துள்ளார் என்றார். இதனை தொடர்ந்து நேரு இளைஞர் மன்றம் சார்பாக கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிபுரிய நேரு இளைஞர் மன்ற இளைஞர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT