Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கல்

தைப்பூசத் திருவிழா தீர்த்தவாரிக்கு கொள்ளிடக்கரைக்கு வந்த சமயபுரம் மாரியம்ம னுக்கு ரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் சீர்வரிசைப் பொருட்களை கோயில் அலுவலர்கள் வழங்க, சமயபுரம் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.

திருச்சி

ரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று முன்தினம் இரவு ரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன், ரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்காரணமாக ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்கு வரும்மாரியம்மனுக்கு, ரங்கநாதர் கோயில் சார்பில் பட்டுப்புடவை,வளையல்கள், மாலைகள் உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி சமயபுரம் கோயிலிலிருந்து கண்ணாடி பல்லக்கில் கொள்ளிடக்கரைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தமாரியம்மன், அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், உள்ளிட்டோர் மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்துச் சென்று, கொள்ளிடம் ஆற்றங்கரையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணைஆணையர் அசோக்குமார் மற்றும் ஊழியர்களிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு ரங்கநாதர் கோயில் சார்பில் வழங்கப்பட்ட வஸ்திரம், மாலைகள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x