Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், நெல்லையை தொடர்ந்து திருச்சிமாவட்ட பிரதிநிதி இரா.அண்ணாதுரையை கட்சியை விட்டு நீக்கிஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த ஜன.27-ம் தேதிசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை முடித்து விடுதலையானார். அவர் தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சிலர் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் போஸ்டர் அடிப்பது, முகநூல் பதிவு வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினருமான புலியூர் இரா.அண்ணாதுரை, சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக குறிப்பிட்டு, அவரை வரவேற்று போஸ்டர் அடித்து அப்பகுதியில் ஒட்டியிருந்தார். இதையடுத்து அவரை நேற்று அதிமுகவில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
புலியூர் இரா.அண்ணாதுரை, சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து அந்தப்பகுதியில் ஒட்டியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT