Published : 28 Jan 2021 09:30 PM
Last Updated : 28 Jan 2021 09:30 PM
குழந்தைத் திருமண வழக்கில் தந்தை, மகன் உட்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
செல்லூர் மேலத்தோப்பைச் சேர்ந்தவர் பழனி (57). இவர் மகன் ஜெயபாண்டி (31). இவருக்கு 2012-ல் சம்மட்டிபுரம் ராஜ்நகரைச் சேர்ந்த வி.பாலகிருஷ்ணனின் 16 வயது மகளைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
இது தொடர்பாக செல்லூர் போலீஸார் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பழனி, ஜெயபாண்டி, பாலகிருஷ்ணனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதித்தும் நீதிபதி பத்மநாபன் இன்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT