Last Updated : 28 Jan, 2021 02:36 PM

 

Published : 28 Jan 2021 02:36 PM
Last Updated : 28 Jan 2021 02:36 PM

புதுச்சேரியில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 650 நெருங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜன 28) தெரிவித்திருப்பதாவது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,772 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-21, காரைக்கால்-5, ஏனாம்-2, மாஹே-11 என மொத்தம் 39 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் லக்ஷ்மி நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இறந்தோர் எண்ணிக்கை 650-ஐ நெருங்கியுள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை தற்போது வரை 38 ஆயிரத்து 973 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 100 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 191 பேரும் என மொத்தம் 291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 35 (97.59 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 67 ஆயிரத்து 923 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 343 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x