Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
தண்ணீரில் மாத்திரையை போட்டு கொசுக்களை அழிக்கும் சோதனை விரைவில் சென்னையில் தொடங் கப்பட உள்ளது.
இந்தியாவில் டெங்கு, மலேரியா காய்ச்சலால் பாதிப்பும், உயிரிழப்பும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தண்ணீரில் கொசுக்கள் வளர்வதைத் தடுக்க தனியார் நிறுவனம் ஒன்று மாத்திரை வடிவிலான மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சென்னையில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள மாத்திரை வடிவிலான மருந்தை, ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சோதனை செய்ய உள்ளது.
மாத்திரை வடிவில் உள்ள இந்த மருந்தை தண்ணீரில் போட்டால், தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் அழிந்துவிடும். விரைவில் இந்தசோதனை சென்னையில் நடைபெறவுள்ளது.
மேலும், எந்தெந்த தண்ணீரில் இந்த மாத்திரையைப் பயன் படுத்தலாம் எனவும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடீஸ் கொசுக்களை அழிக்க முடியும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT