Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

ஏரியில் மூழ்கி 3 இளம் பெண்கள் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே கன்னித்திருவிழாவில் ஏரியில் மூழ்கி 3 இளம் பெண்கள் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியையொட்டிய சில கிராமங்களில் காணும் பொங்கலன்று தொடங்கி, தொடர்ந்து 13 நாட்கள் கன்னித் திருவிழா நடைபெறும். பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் கன்னித்திருவிழாவில் நேற்று 11-ம் நாள் விழா நடைபெற்றது.

இந்தப் பூஜையில் பங்கேற்ற 7 இளம்பெண்கள் அரசடிக்குப்பம் சித்தேரி ஏரியில் (சம்பிரதாய வழக்கப்படி) நீரில் இறக்கி விடப்பட்டனர் . இந்நிகழ்வு முடிந்தவுடன் அதனை வேடிக்கை பார்க்க சென்ற ஏ.புதூரைச் சேர்ந்த லட்சுமிபூபதி மகள்கள் நந்தினி(18),வினோதினி (16) மற்றும் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி (19) ஆகியோர் ஏரியில் குளிக்க முயன்றனர்.

அப்போது 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x