Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
கரோனா தடுப்பூசியை கடந்த 10 நாட்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் 1.60 லட்சம் பேருக்கு போட திட்டமிட்ட நிலையில், அச்சம் காரணமாக 69 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம்தேதி தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு 160 மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்ட நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 69 ஆயிரம் பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறைஅதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காகவே சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் பிரபல மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஆனால், சுகாதாரப் பணியாளர்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வருகிறது. அதனாலேயே தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்ப்பவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படாது. எனவே, அனைவரும் குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT