Published : 24 Jan 2021 06:41 PM
Last Updated : 24 Jan 2021 06:41 PM

தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 168 பேருக்கு பாதிப்பு: 642 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,34,740.

சென்னையில் 168 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,904.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,56,40,385.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 62,619.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,34,740.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 569.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 168.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,04,545 பேர். பெண்கள் 3,30,161 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 341 பேர். பெண்கள் 228 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 642 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,17,520 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 தனியார் மருத்துவமனையிலும், 4 அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். எவ்வித நோய் பாதிப்பும் இல்லாமல் உயிரிழந்தவர்கள் எவருமில்லை.

இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,316 ஆக உள்ளது. சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை சென்னையில் மொத்தம் 4085 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x