Published : 24 Jan 2021 05:36 PM
Last Updated : 24 Jan 2021 05:36 PM

வன்னியர் இட ஒதுக்கீடு; பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டம் 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் நாளை 25-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x