Last Updated : 24 Jan, 2021 04:58 PM

 

Published : 24 Jan 2021 04:58 PM
Last Updated : 24 Jan 2021 04:58 PM

புதுச்சேரியில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜன 24) தெரிவித்ததாவது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,046 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-15, காரைக்கால்-6, மாஹே-9 என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், புதுச்சேரி வாணரப்பேட்டை ஜெயராம செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்த 87 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 645 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 860 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 100 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 188 பேர் என மொத்தம் 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 927 (97.60 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 189 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 820 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x