Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM
தெற்கு ரயில்வேயில் சென்னை - ஜோத்பூர், நாகர்கோவில் - மும்பை உட்பட 23 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் நாடுமுழுவதும் வழக்கமான பயணிகளின் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறுவழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தெற்கு ரயில்வேயில்இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் பெரும்பாலான ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டில் ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் என பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வந்ததால், 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்கப்பட்டன. இந்நிலையில், பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலும் 23 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வேயில், மதுரை - பிகானீர் (06053), சென்னை எழும்பூர் - ஜோத்பூர் (06067/06068), ராமேசுவரம் - ஓக்ஹா (06733/067340) திருநெல்வேலி - பிலாஸ்பூர் (06070/06069), திருநெல்வேலி - தாதர் (06072/06071) உட்பட 14 வாராந்திர சிறப்பு ரயில்களும், வாரம் 2 முறை இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை (06352/06351), லக்னோ - சென்னை சென்ட்ரல் (06094) உள்ளிட்ட 5 சிறப்பு ரயில்களும், கொச்சுவேலி - மைசூர் (06316/06315) உட்பட 4 தினசரி சிறப்பு ரயில்களும், வரும் மார்ச் வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இவ்வாறு ரயில்வே அதிகாரி கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT