Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர்

சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சை மண்டலத்தில் போட்டியிட உள்ள 35 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை இப்போது அறிவித்துள்ளோம். அவர்களும் இங்கு வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் மாநாடு நடத்தி, மொத்த வேட்பாளர்களையும் அறிவிப்போம். அவர்களில் 117 பெண்களும், 117 ஆண்களும் இருப்பார்கள்.

எங்களின் கோரிக்கைகளையும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும் மக்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வாக்குகளை சேகரிப்பதற்காகவே, எங்களின் பிரச்சார பயணத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ளோம் என்றார்.

பின்னர், கட்சியின் தஞ்சை மண்டத்தில் போட்டியிடும் 35 தொகுதிகளின் வேட்பாளர்கள் (15 பெண்கள் உட்பட) அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

வேட்பாளர்கள் விவரம்: தஞ்சாவூர்- சுபா தேவி, ஒரத்தநாடு- கந்தசாமி, பேராவூரணி- திலிபன், பட்டுக்கோட்டை- கீர்த்திகா, திருவையாறு- து.செந்தில்நாதன், பாபநாசம்- கிருஷ்ணகுமார், கும்பகோணம்- மோ.ஆனந்த்,திருவிடைமருதூர்-திவ்யா பிரகாஷ், மன்னார்குடி- செ.அரவிந்த், திருத்துறைப்பூண்டி- ஆர்த்தி அப்துல்லா, திருவாரூர்- வினோதினி, மயிலாடுதுறை- காசிராமன், பூம்புகார்- காளியம்மாள், சீர்காழி- கவிதா.

நாகை- அப்பு என்கிற அகஸ்டின்ராஜ், வேதாரண்யம்- ராஜேந்திரன், கீழ்வேளூர்- பொன் இளவழகி, அறந்தாங்கி- மு.இ.ஹிமாயூன் கபீர், ஆலங்குடி- திருச்செல்வம், திருமயம்- சிவராமன், புதுக்கோட்டை- சசிக்குமார், கந்தர்வகோட்டை- ரமீலா மோகன், பெரம்பலூர்- மகேஸ்வரி, குன்னம்- அருள், ஜெயங்கொண்டம்- நீல மகாலிங்கம், அரியலூர்- சுகுணா குமார்.

திருவெறும்பூர்- சோழசூரன், திருச்சி கிழக்கு- பிரபு, திருச்சி மேற்கு- வினோத், லால்குடி- தமிழ் பிரபா, மண்ணச்சநல்லூர்- கிருஷ்ணசாமி, முசிறி- ஸ்ரீதேவி, துறையூர்- தமிழ்ச்செல்வி, மணப்பாறை- கனிமொழி, ஸ்ரீரங்கம்- செல்வரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x