Published : 22 Jan 2021 02:31 PM
Last Updated : 22 Jan 2021 02:31 PM

ஜன. 28-ல் தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொ) சி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழாவில் ஒன்றான தைப்பூசத்திருவிழா வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து காலை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி திருக்கோயில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x