Published : 15 Oct 2015 10:02 AM
Last Updated : 15 Oct 2015 10:02 AM
‘ஒரு வழக்கில் கைது செய்யப்படும் நபர் வசதியானவராக இருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். ஏழையாக இருந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் சிறையில் அடைக்கின்றனர் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி விவசாயி ஒருவரை, வங்கி அதிகாரி தாக்கியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில், விவசாயியைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட வங்கி அதி காரியை தாமதமாக நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி, அவரை உடன டியாக சிறையில் அடைக்காமல் மருத்துவமனையில் சேர்த்ததை நீதிபதி கண்டித்தார். நல்ல உடல் நலத்துடன் இருந்த வங்கி அதி காரிக்கு நெஞ்சுவலி வந்ததாக சான்றிதழ் வழங்கிய மருத்துவ ரையும் நீதிபதி கடிந்துகொண்டார்.
பின்னர், ஒரு வழக்கில் கைது செய்யப்படும் நபர் வசதியான வராக இருந்தால், அவர்கள் உடல் நலம் பாதிப்பு ஏற்படாதபோதும் அவர்களை சிறையில் அடைக்கா மல் மருத்துவமனையில் சேர்ப்ப தும், அதே நேரத்தில் கைதாகும் நபர் ஏழையாக இருந்தால் அவர்களுக்கு உண்மையிலேயே மாரடைப்பு வந்தாலும், அவர் களை மருத்துவமனையில் சேர்க் காமல் சிறையில் அடைப்பதும் எங்களுக்குத் தெரியாமல் இல்லை எனக் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில் விவசாயி தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். அதற்கு, அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக கூறி வழக்கை முடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT