Published : 24 Oct 2015 07:44 AM
Last Updated : 24 Oct 2015 07:44 AM
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள நெடுங்குடியில் குளத்தில் கிடந்த 2 உலோக சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நெடுங்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் வலை விரித்து நத்தை பிடித்துள்ளனர். அப் போது, இவர்களின் வலையில் உலோகத்தால் ஆன இரு சாமி சிலைகள் சிக்கின.
இதுகுறித்து தகவலறிந்த திருமயம் வட்டாட்சியர் மனோரமா, கே.புதுப்பட்டி போலீஸார் அந்தச் சிலை களை மீட்டனர். இவை தட்சி ணாமூர்த்தி, அம்மன் சிலை என்பது தெரியவந்துள்ளது. உலோகத்தால் ஆன தலா 2 அடி உயரத்தில் உள்ள இரு சிலைகளும் குளத்தில் வீசப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிலைகள் திருமயத்தில் உள்ள சார் கருவூலத்தில் வைக்கப்பட்டுள் ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT