Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா பேரிடர் ஏற்பட்டதிலிருந்து அதை எதிர்கொள்ள தீவிரப் பணியாற்றி வருகிறது. தேசிய அளவில் கரோனாவுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் முதல் 3 தனியார் மருத்துவமனைகளில் ஒன்று என்ற அங்கீகாரம் சவீதாவுக்கு கிடைத்துள்ளது.

இங்கு கரோனா நோயாளிகளுக்காக 400 படுக்கைகள்; 30 தீவிர சிகிச்சை படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை பிரத்தியேக பிபிஇ ஆடைகளை வடிவமைத்து தயாரித்துள்ளது.

தற்போது இங்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன. 20-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மருத்துவக்கல்லூரி துறை தலைவர்கள், மூத்த டாக்டர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவன வேந்தர் என்.எம்.வீரய்யன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் வி.சவீதா, மருத்துவக் கண்காணிப்பாளர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தொடக்க விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x