Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்ற இளைஞரிடம் போலீஸார் விசாரணை: 3 துப்பாக்கிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்.

சென்னை

அம்பத்தூரில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்ற இளைஞரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு, கலைவாணர் நகர், திருப்பதி குடை ரோட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(23). இவர், பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மேலும், நாய் குட்டிகளை வாங்கி விற்பனை செய்தும் வருகிறார்.

இந்நிலையில் தமிழ்ச்செல்வன், வீட்டில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஒரு பெரிய துப்பாக்கி மற்றும் 2 சிறிய துப்பாக்கிகள் மற்றும் இரும்பு குண்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

‘ஏர்கன்’ வகை

அப்போது, அவை பலூன்களை சுட பயன்படுத்தும் ‘ஏர்கன்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கிகள் என்பதும், அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி (லைசென்ஸ்) தேவையில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் இரும்பு குண்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், தமிழ்செல்வனை போலீஸார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவரிடம் எதற்காக துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்றார்? என்ன பயன்பாட்டுக்காக துப்பாக்கி வாங்கினார் என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x